முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

aragalur ஆறகழூர் கல்வெட்டுகள்

ஆறகழூர் கல்வெட்டுக்கள்
ஆறகழூர் கன்னட கல்வெட்டு

காமநாத
மாணிக்ய

ஆவணம் 2017

எண் 3 - கன்னட துண்டு கல்வெட்டு

ரொம்ப சிரமப்படாம கிடைத்த கல்வெட்டு இது
சென்ற வருடம் அத்தை மருமகளுக்கு வளைகாப்பு. அந்த நிகழ்சிக்காக ஆறகழூர் தேரோடும் வீதியில் உள்ள அத்தை வீட்டுக்கு சென்றிருந்தேன். சின்ன வயசில் இருந்து விளையாடிய இடம்தான் அது. முதல் பந்தியில் சாப்பிட்டுகிட்டு இருந்தாக..நான் வெளியே நாற்காலியில் உட்காந்துகிட்டு இருந்தேன்..வீட்டுக்கு பக்கத்தில் உள்ள காலி இடத்தில் மாடெல்லாம் கட்டி வச்சிருப்பாங்க..

அருகில் உட்காந்திருந்த ஒருவர் என்னப்பா வியாபாரமெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு
..
நல்லா போயிட்டு இருக்கண்ணே..
எவ்வளவு பழமையான ஊரு இது .ஒரு தேரு போட்டா சுத்தி இருக்கிற எல்லா ஊரில் இருந்தும் சனம் வரும். ஒரு வாரத்துக்கு ஊரே அமக்களப்படும்..இப்ப தேர் போட்டே ரொம்ப வருசமாச்சி...
எடுத்து செய்ய ஆள் இல்லன்ன.....எல்லாத்துக்கும் அவங்கவங்க வேலை..பாதிபேர் வெளியூரில் வேலை கிடைச்சி அங்கியே செட்டில் ஆயிட்டாங்க..இங்க கொஞ்சபேர்தான் இருந்து அல்லாடிகிட்டு இருக்கோம்.
இப்படியே உரையாடல் தொடர்ந்தது.
சட்டுன்னு உச்சா வர்ர மாதிரி இருந்திச்சி..போயிட்டு திரும்பி வரும்போது வழியில் ஒரு கல்லு நின்னுச்சி .வழக்கம் போல் அந்த கல்லை உத்து உத்து பாத்தேன்..
அட...சூப்பரு.. 2 வரியில் எழுத்துக்கள் இருந்திச்சி..
சந்தோசத்தில் தலை கால் புரியல...ஆனா அது கன்னடத்தில் இருந்துச்சி...அதை அப்படியே என் செல்லில் உள் வாங்கிகொண்டேன்..
அதை முகநூலில் பதிவு செய்த போது நண்பர்கள் அதை படித்து சொன்னார்கள். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் 2 வார்த்தையா இருந்தாலும் முக்கியமான வார்த்தைகள்.
ஆறகழூர் காமநாதயீஸ்வரன் கோயில் இருப்பதால்
பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு பல குடும்பங்களில் காமநாதன் என்று பெயர் வைப்பார்கள்.
12 ஆம் நூற்றாண்டு கோயிலான திருகாமீசுரமுடைய நாயனார் கோயிலில் தேவரடியார்கள் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் இறைவனுக்கு பூசை செய்யும் உரிமையும் பெற்றிருந்தனர். கல்வெட்டுகளும் இவர்களை பற்றி பேசுகின்றன..இவர்கள் மாணிக்கிகள் என்றும் அழைக்கப்பட்டனர்.
இந்த கல்வெட்டில் இருந்த இரு வார்த்தைகள் இவைதான்
காமநாத
மாணிக்ய
இது 2017 ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆறகழூர் கன்னட கல்வெட்டு
ஆறகழூர் பொன்.வெங்கடேசன்
காலம் :18 ஆம் நூற்றாண்டு
இடம் : தேரோடும் வீதி மணி வீட்டுக்கு பின்புறம்
செய்தி : பெயர் குறித்துள்ள
கல்வெட்டு வாசகம்
1.காமநாத
2. மாணிக்ய

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரஞ்சரம் லகுலீசர் - varanjaram lakuleesar

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் வரஞ்சரம் லகுலீசர்                                                           வரஞ்சரம் சிவன் கோயில் 10 நிமிடங்களில் கிடைத்த 10 நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு எதிர்பாராமல் ஒன்று கிடைக்கும்போது அடையும் மகிழ்சிக்கு அளவே இல்லை.சில நாட்களுக்கு முன் குருநாதர் விழுப்புரம் வீரராகவன் ஐயாவும் நானும் தேடலுக்கு போய் ஒரு கல்வெட்டை படி எடுத்தோம். அருகே உள்ள ஒரு கோயிலுக்கு போக வேண்டும் என்பது நீண்டநாள் திட்டம். ஆனால் எப்ப போனாலும் அந்தக்கோயில் மூடியே கிடக்கும். அன்றும் அப்படித்தான் மூடி இருந்தது. அர்சகர் வீட்டை விசாரித்து அவரை நேரில் சந்தித்தோம். அவர் வெளியூர் கிளம்புகிறேன் இன்னொரு நாள் காலையில் சீக்கிரம் வாங்க என்று சொன்னார். ஐயா ரொம்ப தொலைவில் இருந்து வருகிறோம், ஒரு 10 நிமிடம் திறந்து விட்டால் பார்த்து விடுகிறோம் என அனுமதி வாங்கி உள்ளே சென்றோம். மளமளவென செல்லில் படங்களை சுட்டு தள்ளினேன். அர்ச்சகருக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினோம்.வீட்டுக்கு வந்த பின் தான் ஒவ்வொரு படமாக பார்த்தேன். ஒரு படத்தை பார்த்தபோது உடலுக்குள் திடீரென ஒரு உற்சாகம் தொற்றியது. இவர் அவராக

சேலம் வரலாற்று ஆய்வு மையம்-பேளூர் மூக்கறுப்பு கல்வெட்டு

மூக்கறுப்பு போர் நடந்ததிற்கான முதல் கல்வெட்டு ஆதாரம் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி. 2015 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூருக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு கல்வெட்டுக்கள் ஏதாவது கிடைக்குமா என தேடியபோது அங்காளம்மன் கோயில் முன்புள்ள பாக்குத்தோப்பில் ஓர் கல்வெட்டு இருப்பதாய் சொன்னார்கள். போய் பார்த்த போது அக்கல்வெட்டு பாதி பூமியில் புதைந்திருந்தது. அதை புகைப்படம் மட்டும் எடுத்து விட்டு வந்து விட்டேன். அதன் பின் சேலம் வரலாற்று தேடல் குழு என்ற அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது         சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,   கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் அய்யா துணைத்தலைவர்   கலைச்செல்வன் ஆசிரியர், செயலாளர் மருத்துவர் பொன்னம்பலம், இணைச்செயலாளர் பெரியார்மன்னன், பொருளாளர் சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் அடங்கிய குழு இக்கல்வெட்டை ஆய்வு செய்து மூக்கறுப்பு போர் நடந்ததற்கான  ஆதாரத்தை கண்டு பிடித்தது .இதைப்பற்றி சன்னல் இதழ் வெளியிட்ட கட்டுரை     கல்வெட்டின் மேல் சிவல

வீரகனூர் புத்தர்

  வீரகனூர் புத்தர் - மகதை மண்டலம் புத்தரின் கையில் காணப்படும் இந்த முக்கோணம் போன்ற குறியீடு நமக்கு சிறப்பான புதிய செய்தி ஏதாவது ஒன்றை சொல்கிறதா ??    சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரை தலைநகராக கொண்ட மகதை மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்த ஊர் வீரகனூர் அங்கு உள்ள புத்தர் சிலை இது இதன் காலம் 12 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்