முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

aragalur ஆறகழூர் கல்வெட்டுக்கள்

ஆறகழூர் கல்வெட்டுக்கள்
எண் 1. ஜினாலய கல்வெட்டு

2016 ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டது.
ஆறகழூர் வெங்கடேசன் பொன் Mangai Ragavan சி.வீரராகவன் சார்

ஆறகழூர் பகுதியில் முதன் முதலில் 2015ல் நான் கண்டறிந்த முதல் கல்வெட்டு இதுவாகும்.
1.1. ஆறகழூர் ஜினாலய கல்வெட்டு
ஆறகழூர் பொன்.வெங்கடேசன்
சி.வீரராகவன்
வீ.மங்கையர்கரசி ராகவன்
இடம் : சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் கோட்டைகரைக்கு அருகே கலியன் என்பவரின் வயலுக்கு அருகே
காலம்: பொன்பரப்பின பெருமாள் ,வாணகோவரையன் ,13ஆம் நூற்றாண்டு
செய்தி:
பொன்பரப்பின பெருமாள், மற்றும்
நாற்பத்தெண்ணாயிரவர் என்பவர்கள் இங்கு ஒரு
ஸ்ரீகோயில் ஜிநாலயத்தையும், நாற்பத்தெண்ணாயிர பெரும்பள்ளி
என்ற சமணப்பள்ளியையும் பராமரித்ததை குறிப்பிடுகிறது.
இக்கல்வெட்டில் குறியீடுகள் காணப்படுகின்றன
பூமாதேவி அல்லது சமண உருவம்,இருபுறமும் சாமரம்,கண்ணாடி காட்டப்பட்டுள்ளது, ஏர்கலப்பை,உடுக்கை,சுத்தியல்,கொரடு, குறுவாள், குத்து விளக்கு காணப்படுகிறது. முக்காலியின் மீது பூர்ணகும்பமும் அதன் மேல் அம்புக்குறி அல்லது மீன் போன்ற ஒன்றிலிருந்து ஓர் உருவம் வருவதை போல் உள்ளது..இது ஆய்வுக்கு உரிய ஒன்றாகும் .இந்த ஜிநாலயத்தில் இருந்த ஒரு உலோக தீர்தங்கரர் சிலையும்,ஒரு வெள்ளைக்கல்லால் ஆன சமண அருகர் சிலையும், ஒரு உலோக சமண யட்ஷி சிலையும் இன்றும் ஆறகழூர் திருக்காமீசுரமுடைய நாயனார் கோயிலில் உள்ளது.
கல்வெட்டு பாடம் :
1. ஸ்வஸ்திஸ்ரீ இந்த
2 ..ஸ்ரீகொயில் பொன்
3. .பரப்பின பெருமாள்
4. .ஜிநாலயமான
5. .நாற்பத்தெண்ணா
6. .யிரப் பெரும்பள்ளி
7. நாற்பத்தெண்ணா
8. யிரவர் ரக்‌ஷை
ஆறகழூர் ஜினாலய கல்வெட்டு

ஆவணம் 2016

ஆவணம் 2016

எழுத்துக்களை அறியும் பணியில்

ஜினாலய கல்வெட்டு வாசகம்

நானும் சந்தோசும்

கல்வெட்டை நிலை நிறுத்தும் பணியில்

முதன் முதலில் பார்த்தபோது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சேலம் வரலாற்று ஆய்வு மையம்-பேளூர் மூக்கறுப்பு கல்வெட்டு

மூக்கறுப்பு போர் நடந்ததிற்கான முதல் கல்வெட்டு ஆதாரம் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி. 2015 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூருக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு கல்வெட்டுக்கள் ஏதாவது கிடைக்குமா என தேடியபோது அங்காளம்மன் கோயில் முன்புள்ள பாக்குத்தோப்பில் ஓர் கல்வெட்டு இருப்பதாய் சொன்னார்கள். போய் பார்த்த போது அக்கல்வெட்டு பாதி பூமியில் புதைந்திருந்தது. அதை புகைப்படம் மட்டும் எடுத்து விட்டு வந்து விட்டேன். அதன் பின் சேலம் வரலாற்று தேடல் குழு என்ற அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது         சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,   கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் அய்யா துணைத்தலைவர்   கலைச்செல்வன் ஆசிரியர், செயலாளர் மருத்துவர் பொன்னம்பலம், இணைச்செயலாளர் பெரியார்மன்னன், பொருளாளர் சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் அடங்கிய குழு இக்கல்வெட்டை ஆய்வு செய்து மூக்கறுப்பு போர் நடந்ததற்கான  ஆதாரத்தை கண்டு பிடித்தது .இதைப்பற்றி சன்னல் இதழ் வெளியிட்ட கட்டுரை ...

வரஞ்சரம் லகுலீசர் - varanjaram lakuleesar

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் வரஞ்சரம் லகுலீசர்                                                           வரஞ்சரம் சிவன் கோயில் 10 நிமிடங்களில் கிடைத்த 10 நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு எதிர்பாராமல் ஒன்று கிடைக்கும்போது அடையும் மகிழ்சிக்கு அளவே இல்லை.சில நாட்களுக்கு முன் குருநாதர் விழுப்புரம் வீரராகவன் ஐயாவும் நானும் தேடலுக்கு போய் ஒரு கல்வெட்டை படி எடுத்தோம். அருகே உள்ள ஒரு கோயிலுக்கு போக வேண்டும் என்பது நீண்டநாள் திட்டம். ஆனால் எப்ப போனாலும் அந்தக்கோயில் மூடியே கிடக்கும். அன்றும் அப்படித்தான் மூடி இருந்தது. அர்சகர் வீட்டை விசாரித்து அவரை நேரில் சந்தித்தோம். அவர் வெளியூர் கிளம்புகிறேன் இன்னொரு நாள் காலையில் சீக்கிரம் வாங்க என்று சொன்னார். ஐயா ரொம்ப தொலைவில் இருந்து வருகிறோம், ஒரு 10 நிமிடம் திறந்து விட்டால் பார்த்து விடுகிறோம் என அனுமதி வாங்கி உள்ளே சென்றோம். மளமளவென செல்லில் படங்களை சுட்டு தள்ளினேன். அர்ச்சகருக்கு நன்றி சொல்லி விட...

புதிய கற்கால கருவிகள்

வாழப்பாடி அடுத்த பெலாப்பாடி மலை கிராமத்தில் புதிய கற்காலக் கருவிகள்: சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்தனர்: வாழப்பாடி, நவ.04:-  சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பெலாப்பாடி மலை கிராமத்தில் பழமையான கோவில் வளாகத்தில் நுாற்றுக்கும் அதிகமான, 6,000 ஆயிரம் பழைமையான புதிய கற்கால கருவிகளை வைத்து பாதுகாத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வருவதை சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அருநுாற்றுமலை மற்றும் கல்வராயன் மலை கிராமங்கள், 6,000 ஆண்டுகளுக்கு முன்னரே பழங்கால மக்களின் வாழிடமாக இருந்ததை அப்பகுதியில் கிடைத்து வரும் புதிய கற்கால கருவிகள் மற்றும் கல்வெட்டுகள், நடுகற்கள் ஆகியவை உறுதிப்படுத்தி வருகின்றன. ஏற்கனவே, கல்வராயன்மலை சேம்பூர், அத்திரிப்பட்டி, கிராங்காடு, குன்னுார் மற்றும் அருநுாற்றுமலை பள்ளிக்காடு, சிறுமலை உள்ளிட்ட  கிராமத்தில் புதிய கற்கால கருவிகளும், இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்படும் ஈமச்சின்னங்களான கற்திட்டைகள் மற்றும் கற்குவைகளும் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினரால் கண்டறியப்பட்டது.   சேலம் வரலாற்று ஆ...