ஆறகழூர் கல்வெட்டுகள் எண் 7 காமக்காபாளையம் நானும் வீரராகவன் ஐயாவும் நண்பர்களுடன் கன்னட கல்வெட்டு காமக்காபாளையம் கன்னட கல்வெட்டை பார்த்தபோதே அங்கிருந்த அருணாசலேசுவரர் கோயிலின் சுவற்றில் இருந்த இந்த கல்வெட்டையும் வீரராகவன் ஐயாவும் நானும் படி எடுத்து படித்தோம். பணி சுமையின் காரணமாக கொஞ்ச நாள் முன்புதான் வெளியிட்டோம். காமக்காபாளையத்தை சேர்ந்த நண்பர் Tvenkatesan Tvenkatesan எங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்தார். விருதாசலம் கோயிலின் தாக்கத்தால் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கலாம் தலைவாசல் அருகே 527 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே காமக்காபாளையம் என்ற ஊரில் கி.பி. 1490 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், சேலம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் இருவரும் காமக்காபாளையத்தில் உள்ள அருணாசலேசுவரர் கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது கோயிலின் அர்த்த மண்டபத்தில் விநாயகர் மாடத்துக்கு மேல் ஒன்பது வரிகளில் ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டது. 98 செ.மீ நீளம்
சேலம் மாவட்ட வரலாறு மற்றும் தொல்லியல் ஆறகழூர் செய்திகள்