ஆறகழூர் கோட்டை ஆறகழூரில் கோட்டை இருந்ததற்கான தடயங்கள் வெளிப்படையாய் இப்போது இல்லை. கோட்டைக்கரை என்ற பெயர் மட்டுமே இங்கு கோட்டை இருந்ததற்கான ஆதாரமாய் உள்ளது.கி.பி.12 ஆம் நூற்றாண்டில் ஆறகழூர் மகதை மண்டலத்தின் தலைநகராக இருந்துள்ளது. தலைநகர் என்பதால் நிச்சயம் கோட்டை இருந்திருக்க வேண்டும். கோட்டைக்கரையில் வீடு கட்ட கடைக்கால் எடுக்கும் போது கல்தூண்கள் , அலங்கார வளைவு கற்கள் கிடைத்துள்ளன. எனவே கோட்டைக்கரை, மற்றும் அரசு பள்ளி இருக்கும் இடம் கோட்டை பகுதியாக இருந்திருக்க வாய்ப்புண்டு. . கோட்டையை சுற்றி பாதுகாப்புக்காக அகழிகள் இருந்துள்ளது ஆறு+அகழ்+ஊர்= ஆறகழூர் என்றும் ஆறே அகழியாக அமைந்ததால் ஆறகழூர் என பெயர் பெற்றது என்ற கருத்துக்கள் உண்டு 17 ஆம் நூற்றாண்டில் வேணுவராயன் என்ற சிற்றரசன் கோட்டை கட்டிக்கொண்டு அரசாண்டதாக லெபான் குறிப்பிடுகிறார். திப்புசுல்தான் இங்கு வரும்போது கல்வராயன் மலைப்பகுதிக்கு ஓடிவிட்டான் என்று சொல்லப்படும் செய்தியால் வேணுவராயன் காலம் திப்புசுல்தான் இறந்த 18 ஆம் நூற்றாண்டாகலாம்..ஆறகழூர் திருகாமீசுரமுடைய நாயனார் கோயிலின் தென்புற சுவரின் அருகே உள்ள பகுதி துலுக்கண் தோட்டம
சேலம் மாவட்ட வரலாறு மற்றும் தொல்லியல் ஆறகழூர் செய்திகள்