முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆறகழூர் கோட்டை

ஆறகழூர் கோட்டை

ஆறகழூரில் கோட்டை இருந்ததற்கான தடயங்கள் வெளிப்படையாய் இப்போது இல்லை. கோட்டைக்கரை என்ற பெயர் மட்டுமே இங்கு கோட்டை இருந்ததற்கான ஆதாரமாய் உள்ளது.கி.பி.12 ஆம் நூற்றாண்டில் ஆறகழூர் மகதை மண்டலத்தின் தலைநகராக இருந்துள்ளது. தலைநகர் என்பதால் நிச்சயம் கோட்டை இருந்திருக்க வேண்டும். கோட்டைக்கரையில் வீடு கட்ட கடைக்கால் எடுக்கும் போது கல்தூண்கள் , அலங்கார வளைவு கற்கள் கிடைத்துள்ளன. எனவே கோட்டைக்கரை, மற்றும் அரசு பள்ளி இருக்கும் இடம் கோட்டை பகுதியாக இருந்திருக்க வாய்ப்புண்டு..
கோட்டையை சுற்றி பாதுகாப்புக்காக அகழிகள் இருந்துள்ளது ஆறு+அகழ்+ஊர்= ஆறகழூர் என்றும் ஆறே அகழியாக அமைந்ததால் ஆறகழூர் என பெயர் பெற்றது என்ற கருத்துக்கள் உண்டு
17 ஆம் நூற்றாண்டில் வேணுவராயன் என்ற சிற்றரசன் கோட்டை கட்டிக்கொண்டு அரசாண்டதாக லெபான் குறிப்பிடுகிறார். திப்புசுல்தான் இங்கு வரும்போது கல்வராயன் மலைப்பகுதிக்கு ஓடிவிட்டான் என்று சொல்லப்படும் செய்தியால் வேணுவராயன் காலம் திப்புசுல்தான் இறந்த 18 ஆம் நூற்றாண்டாகலாம்..ஆறகழூர் திருகாமீசுரமுடைய நாயனார் கோயிலின் தென்புற சுவரின் அருகே உள்ள பகுதி துலுக்கண் தோட்டம் என அழைக்கப்படுவது கவனிக்கத்தக்கது.
வேணுவராயனுக்கு முன்பே ஆறகழூர் கோட்டையுடன் கூடிய கோநகராக இருந்துள்ளது. ரிச்சர்ட் சேலம் புராணத்தில் ஆறகழூர் ஏகாம்பர முதலியார் என்பவரின் கோநகராக இருந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். ஏகாம்பர முதலியாரை கெட்டி முதலியார் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை ஏற்றுக்கொண்டால் ஆத்தூரில் கெட்டி முதலிகள் வலிவோடு விளங்கிய காலத்தில் அவர்களுக்கு துணையாக ஒரு பாதுகாப்பு அரணாக ஆறகழூர் கோட்டை இருந்திருக்கலாம்.
தொடர் ஆய்வுகள் ஆறகழூர் கோட்டை பற்றிய செய்திகளை வெளி கொணரலாம்.
#ஆறகழூர்பொன்வெங்கடேசன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரஞ்சரம் லகுலீசர் - varanjaram lakuleesar

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் வரஞ்சரம் லகுலீசர்                                                           வரஞ்சரம் சிவன் கோயில் 10 நிமிடங்களில் கிடைத்த 10 நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு எதிர்பாராமல் ஒன்று கிடைக்கும்போது அடையும் மகிழ்சிக்கு அளவே இல்லை.சில நாட்களுக்கு முன் குருநாதர் விழுப்புரம் வீரராகவன் ஐயாவும் நானும் தேடலுக்கு போய் ஒரு கல்வெட்டை படி எடுத்தோம். அருகே உள்ள ஒரு கோயிலுக்கு போக வேண்டும் என்பது நீண்டநாள் திட்டம். ஆனால் எப்ப போனாலும் அந்தக்கோயில் மூடியே கிடக்கும். அன்றும் அப்படித்தான் மூடி இருந்தது. அர்சகர் வீட்டை விசாரித்து அவரை நேரில் சந்தித்தோம். அவர் வெளியூர் கிளம்புகிறேன் இன்னொரு நாள் காலையில் சீக்கிரம் வாங்க என்று சொன்னார். ஐயா ரொம்ப தொலைவில் இருந்து வருகிறோம், ஒரு 10 நிமிடம் திறந்து விட்டால் பார்த்து விடுகிறோம் என அனுமதி வாங்கி உள்ளே சென்றோம். மளமளவென செல்லில் படங்களை சுட்டு தள்ளினேன். அர்ச்சகருக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினோம்.வீட்டுக்கு வந்த பின் தான் ஒவ்வொரு படமாக பார்த்தேன். ஒரு படத்தை பார்த்தபோது உடலுக்குள் திடீரென ஒரு உற்சாகம் தொற்றியது. இவர் அவராக

சேலம் வரலாற்று ஆய்வு மையம்-பேளூர் மூக்கறுப்பு கல்வெட்டு

மூக்கறுப்பு போர் நடந்ததிற்கான முதல் கல்வெட்டு ஆதாரம் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி. 2015 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூருக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு கல்வெட்டுக்கள் ஏதாவது கிடைக்குமா என தேடியபோது அங்காளம்மன் கோயில் முன்புள்ள பாக்குத்தோப்பில் ஓர் கல்வெட்டு இருப்பதாய் சொன்னார்கள். போய் பார்த்த போது அக்கல்வெட்டு பாதி பூமியில் புதைந்திருந்தது. அதை புகைப்படம் மட்டும் எடுத்து விட்டு வந்து விட்டேன். அதன் பின் சேலம் வரலாற்று தேடல் குழு என்ற அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது         சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,   கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் அய்யா துணைத்தலைவர்   கலைச்செல்வன் ஆசிரியர், செயலாளர் மருத்துவர் பொன்னம்பலம், இணைச்செயலாளர் பெரியார்மன்னன், பொருளாளர் சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் அடங்கிய குழு இக்கல்வெட்டை ஆய்வு செய்து மூக்கறுப்பு போர் நடந்ததற்கான  ஆதாரத்தை கண்டு பிடித்தது .இதைப்பற்றி சன்னல் இதழ் வெளியிட்ட கட்டுரை     கல்வெட்டின் மேல் சிவல

வீரகனூர் புத்தர்

  வீரகனூர் புத்தர் - மகதை மண்டலம் புத்தரின் கையில் காணப்படும் இந்த முக்கோணம் போன்ற குறியீடு நமக்கு சிறப்பான புதிய செய்தி ஏதாவது ஒன்றை சொல்கிறதா ??    சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரை தலைநகராக கொண்ட மகதை மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்த ஊர் வீரகனூர் அங்கு உள்ள புத்தர் சிலை இது இதன் காலம் 12 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்