சேலம் அழிந்த கோட்டைகள் சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், அமரகுந்தி,ஆண்டிக்கரை,ஆறகழூர்,ஓமலூர்,காவேரிபுரம்,காடையாம்பட்டி,சங்ககிரி,சேலம் ,பேளூர்,மேச்சேரி போன்ற இடங்களில் கலைநயம் மிக்க கோட்டைகள் இருந்துள்ளன. அவற்றில் ஆத்தூர்,சங்ககிரி போன்ற சில இடங்களில் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆறகழூர் கோட்டை 12 ஆம் நூற்றாண்டில் மகதை நாட்டின் தலைநகராக ஆறகழூர் இருந்தது.ஆறகழூரை சுற்றி வலிமையான ஒரு கோட்டை இருந்துள்ளது .இந்த கோட்டையை சுற்றி பாதுகாப்புக்காக 6 அகழிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதனால் ஆறு+அகழ்+ஊர் ஆறகழூர் என்ற பெயரை பெற்றது. ஆறகழூரின் பழைய பெயர் ஆறை. இன்று இரண்டு அகழிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. கோட்டை முழுதுமாய் அழிந்து விட்டது. கோட்டைகரை என்ற பெயர் மட்டுமே எஞ்சியுள்ளது. இந்த கோட்டைக்கரையில் வீடுகட்ட அஸ்திவாரம் எடுக்கும்போது கோட்டையின் சிதைந்த பகுதிகள், செங்கற்கள் ,கல்லின் சிதைந்த பகுதிகள் கிடைக்கின்றன. வாணகோவரையர்கள்,சோழர்கள்,பாண்டியர்கள்,ஹெய்சாளர்கள்,விசயநகரபேரரசு, நாயக்கர்களின் ஆட்சி இங்கு நடைபெற்றுள்ளது. வாணகோவரையர்களுக்கும் ஹெய்சாளர்களுக்கும் இடையே போர் நடந்தபோது ஆறகழூர் கோட்டை தாக்குதலுக்கு உள்ளாக
சேலம் மாவட்ட வரலாறு மற்றும் தொல்லியல் ஆறகழூர் செய்திகள்