முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆறகழூர் கோட்டை

சேலம் அழிந்த கோட்டைகள்

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், அமரகுந்தி,ஆண்டிக்கரை,ஆறகழூர்,ஓமலூர்,காவேரிபுரம்,காடையாம்பட்டி,சங்ககிரி,சேலம் ,பேளூர்,மேச்சேரி போன்ற இடங்களில் கலைநயம் மிக்க கோட்டைகள் இருந்துள்ளன. அவற்றில் ஆத்தூர்,சங்ககிரி போன்ற சில இடங்களில் மட்டுமே எஞ்சியுள்ளன.
ஆறகழூர் கோட்டை
12 ஆம் நூற்றாண்டில் மகதை நாட்டின் தலைநகராக ஆறகழூர் இருந்தது.ஆறகழூரை சுற்றி வலிமையான ஒரு கோட்டை இருந்துள்ளது .இந்த கோட்டையை சுற்றி பாதுகாப்புக்காக 6 அகழிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதனால் ஆறு+அகழ்+ஊர் ஆறகழூர் என்ற பெயரை பெற்றது. ஆறகழூரின் பழைய பெயர் ஆறை. இன்று இரண்டு அகழிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. கோட்டை முழுதுமாய் அழிந்து விட்டது. கோட்டைகரை என்ற பெயர் மட்டுமே எஞ்சியுள்ளது. இந்த கோட்டைக்கரையில் வீடுகட்ட அஸ்திவாரம் எடுக்கும்போது கோட்டையின் சிதைந்த பகுதிகள், செங்கற்கள் ,கல்லின் சிதைந்த பகுதிகள் கிடைக்கின்றன. வாணகோவரையர்கள்,சோழர்கள்,பாண்டியர்கள்,ஹெய்சாளர்கள்,விசயநகரபேரரசு, நாயக்கர்களின் ஆட்சி இங்கு நடைபெற்றுள்ளது. வாணகோவரையர்களுக்கும் ஹெய்சாளர்களுக்கும் இடையே போர் நடந்தபோது ஆறகழூர் கோட்டை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்க கூடும். ஆறகழூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள வி.கூட்டுரோடு அருகே ஆட்டுப்பண்ணை உள்ள இடத்திலும் ஒரு கோட்டை இருந்துள்ளது. கோட்டையில் இருந்த செங்கல்கள் ஆங்காங்கே காணப்படுகிறது. அழிந்த கோட்டை என்ற பெயர் மருவி அந்த இடம் இப்போது அழிஞ்சிகோட்டை என்று அழைக்கப்படுகிறது. போரினாலும் ,காலத்தாலும் அழிந்த ஆறகழூர் கோட்டையின் அடையாளாமாய் கோட்டைக்கரை என்ற பெயர் மட்டுமே எஞ்சியுள்ளது
#ஆறகழூர்பொன்வெங்கடேசன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரஞ்சரம் லகுலீசர் - varanjaram lakuleesar

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் வரஞ்சரம் லகுலீசர்                                                           வரஞ்சரம் சிவன் கோயில் 10 நிமிடங்களில் கிடைத்த 10 நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு எதிர்பாராமல் ஒன்று கிடைக்கும்போது அடையும் மகிழ்சிக்கு அளவே இல்லை.சில நாட்களுக்கு முன் குருநாதர் விழுப்புரம் வீரராகவன் ஐயாவும் நானும் தேடலுக்கு போய் ஒரு கல்வெட்டை படி எடுத்தோம். அருகே உள்ள ஒரு கோயிலுக்கு போக வேண்டும் என்பது நீண்டநாள் திட்டம். ஆனால் எப்ப போனாலும் அந்தக்கோயில் மூடியே கிடக்கும். அன்றும் அப்படித்தான் மூடி இருந்தது. அர்சகர் வீட்டை விசாரித்து அவரை நேரில் சந்தித்தோம். அவர் வெளியூர் கிளம்புகிறேன் இன்னொரு நாள் காலையில் சீக்கிரம் வாங்க என்று சொன்னார். ஐயா ரொம்ப தொலைவில் இருந்து வருகிறோம், ஒரு 10 நிமிடம் திறந்து விட்டால் பார்த்து விடுகிறோம் என அனுமதி வாங்கி உள்ளே சென்றோம். மளமளவென செல்லில் படங்களை சுட்டு தள்ளினேன். அர்ச்சகருக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினோம்.வீட்டுக்கு வந்த பின் தான் ஒவ்வொரு படமாக பார்த்தேன். ஒரு படத்தை பார்த்தபோது உடலுக்குள் திடீரென ஒரு உற்சாகம் தொற்றியது. இவர் அவராக

சேலம் வரலாற்று ஆய்வு மையம்-பேளூர் மூக்கறுப்பு கல்வெட்டு

மூக்கறுப்பு போர் நடந்ததிற்கான முதல் கல்வெட்டு ஆதாரம் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி. 2015 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூருக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு கல்வெட்டுக்கள் ஏதாவது கிடைக்குமா என தேடியபோது அங்காளம்மன் கோயில் முன்புள்ள பாக்குத்தோப்பில் ஓர் கல்வெட்டு இருப்பதாய் சொன்னார்கள். போய் பார்த்த போது அக்கல்வெட்டு பாதி பூமியில் புதைந்திருந்தது. அதை புகைப்படம் மட்டும் எடுத்து விட்டு வந்து விட்டேன். அதன் பின் சேலம் வரலாற்று தேடல் குழு என்ற அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது         சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,   கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் அய்யா துணைத்தலைவர்   கலைச்செல்வன் ஆசிரியர், செயலாளர் மருத்துவர் பொன்னம்பலம், இணைச்செயலாளர் பெரியார்மன்னன், பொருளாளர் சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் அடங்கிய குழு இக்கல்வெட்டை ஆய்வு செய்து மூக்கறுப்பு போர் நடந்ததற்கான  ஆதாரத்தை கண்டு பிடித்தது .இதைப்பற்றி சன்னல் இதழ் வெளியிட்ட கட்டுரை     கல்வெட்டின் மேல் சிவல

வீரகனூர் புத்தர்

  வீரகனூர் புத்தர் - மகதை மண்டலம் புத்தரின் கையில் காணப்படும் இந்த முக்கோணம் போன்ற குறியீடு நமக்கு சிறப்பான புதிய செய்தி ஏதாவது ஒன்றை சொல்கிறதா ??    சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரை தலைநகராக கொண்ட மகதை மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்த ஊர் வீரகனூர் அங்கு உள்ள புத்தர் சிலை இது இதன் காலம் 12 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்