முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆறகழூர் கல்வெட்டுகள்




ஆறகழூர் கல்வெட்டுக்கள் எண் 6
காமக்காபாளையம் கன்னட கல்வெட்டு

நானும் வீரராகவன் ஐயாவும்
என் கல்வெட்டு தேடலில் இது ஒரு முக்கியமான கல்வெட்டு. இது வரை தமிழில் மட்டுமே கல்வெட்டுகளை பார்த்த நான் முதன் முதலில் கன்னட மொழியில் கண்டறிந்த கல்வெட்டு இது.
நண்பர்கள்
சென்ற பதிவில் குறிப்பிட்டதை போல் வேலி முள்ளுக்கு நடுவே தனித்தனியாக இரண்டு கற்கள் கல்வெட்டாய் கன்னட மொழியில் இருந்தது. இதை புகைப்படம் எடுக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். கிட்டவே நெருங்க முடியாத சூழலில் முள் சட்டையை கிழிக்க உடலிலும் கீறி இரத்தம் வர வர போட்டோ எடுத்தேன்.
ஒரு மாதம் கழித்து நானும் விழுப்புரம் வீரராகவன் அய்யாவும் படி எடுக்க சென்றோம். காமக்காபாளையத்தில் இருக்கும் என் நண்பரும் உறவினருமான Tvenkatesan Tvenkatesan அவர்கள் முள்ளை எல்லாம் ஆள் வைத்து வெட்டி சுத்தம் செய்து கொடுத்தார்.
கல்வெட்டு 2 துண்டாய் உடைந்து நட்டு வைக்கப்பட்டிருந்தது. அதை சுற்றி சப்போட்டுக்கு கற்கள் பதிக்கப்பட்டிருந்து. அன்று கொஞ்சம் கவனகுறைவாக இருந்திருந்தால் எங்க கதை முடிந்திருக்கும். ஒரு கல்லை புரட்டியபோது கல்லுக்குள் இருந்து 10க்கும் மேற்பட்ட பெரிய தேள்கள் வெளிவந்தன. பயந்திட்டு தூர ஓடினோம். பின் அந்த கல்வெட்டை படி எடுத்து முடிக்கும் போது மாலை ஆகி விட்டது. 6 மாதம் அதை படிக்க முடியாமல் தடுமாறினோம். அப்புறம் Manonmani Pudhuezuthu சாரின் உதவியுடன் மைசூர் பேராசிரியர் திரு சாமி அவர்களின் உதவியுடன் கல்வெட்டு படிக்கப்பட்டு செய்திதாள் மற்றும் ஆவணம் 2017ல் பதிவு செய்யப்பட்டது.
கல்வெட்டு மைப்படி
காமக்காபாளையம் கன்னட கல்வெட்டு
சி.வீரராகவன், விழுப்புரம்
பொன்.வெங்கடேசன் , ஆறகழூர்
இடம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம்
காமக்காபாளையம் என்ற ஊரில் உள்ள அருணாசலேசுவரர்
திருக்கோயிலில் அருகே செல்வமணி ரெட்டியார் என்பவர்
விளை நிலத்துக்கு அருகே இரண்டாய் உடைந்த
நிலையில் கன்னட மொழியில் உள்ள பலகைக்கல்
காலம்:
பொ.ஆ.1673+78= 1751 , 18 ஆம் நூற்றாண்டு ,மைசூர் இம்மடி
கிருஷ்ணராஜ உடையார்
செய்தி:
கல்வெட்டின் மேல் பகுதியில் சூரியன் பிறை நிலா அதன் கீழ் சங்கு, சக்கரமும் நடுவில் நாமமும் காணப்படுகிறது.கன்னட மொழியில் கன்னட வரி வடிவில் கல்வெட்டு உள்ளது. சகவருடம் 1673 கலியுகம் 4818 ல் வெட்டப்பட்டுள்ளது.மைசூர் மன்னர் உடையார்
இரண்டாம் கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் காஞ்சி தலத்தின் பத்து கோவில்களுக்கு அன்றாட நைவேத்தியம், மாத, வருட உற்சவங்களுக்கு காமக்காபாளையத்தில் வசூலான வரி வருவாய் 73,991 பணம் 792 பொன்னும் தானமாக கொடுத்ததை குறிக்கிறது.
கல்வெட்டுபாடம் :
1. ஸ்ரீ மது ராமாநுஜா (ய) நமஹ
2. ஸ்வஸ்திஸ்ரீ விஜாய பியூதய
3. சாலிவாகன சகாப்த
4. 1673 கலியுக 4818 சந்த
5. வர்த்தமான வாதா பிரஜோத்பத்தி சம்
6. வத்சரதமாக பகுல 5லு ஸ்ரீமான்
7. மகாராஜ ராஜாதி ராஜ
8. பரமேஸ்வர பிரவுட பிரதாப நரப
9. தி வீரஸ்ரீ அப்பிரதிம கிருஷ்ணராஜ
10. உடையரயளு ஸ்ரீ ரங்கப்பா
11. ட்டனதள்ளி ரத்ன சிம்மாசனாரூடரா
12. கி பிருதீவி சா(0) ராஜ்யம் யத்திரளு
13. கஞ்சி ஸ்தலதள்ளி இருவ ஸ்ரீ பார்த்த
14. சாரதி ஸ்வாமிய - - - - தூ - -
15. ஸ்வாமி - - - - அஸ்டபுஜ ஸ்வா
16. மியவரு வி[ஸ்வ] பிரகாச ஸ்வாமி
17. யவரு காமானிகா ர சம்ஹா [ர] ஸ்வா
18. மீ யவரு திரி விக்ரம ஸ்வாமியவ
19.ரு மரகத வர்ண ஸ்வாமியவரு
20. பிரவாள வர்ண ஸ்வாமியவரு வைகுந்
21. ட ஸ்வாமியவரு ஸ்ரீ பாஷ்யக்கார ஸ்வா
22. மிய வரிகே சக நம்ம கை(0) கர்ய
23. வாகி படிதர தீபாராதனே நித்யோத்
24. ஸவ பக்சோத்ஸவ மாசோத்ஸவ
25. சம்வத்ரோத்ஸவ முன் தாத உத்
26. ஸவகரு நடேயளிக்கே பக்கே நிம்ன
27.அவாளு அகரகஜ்ஜின சாவடி
28. ஹோபளி அனந்தகிரி ஸ்தலதளு
29. பெ(ரியேரி) வழித தா காமக்கா பாள்ய
30. த கிராமவனு தாரேயரது
31. கொட்டு இத்தேவேயாத காரன
32. - - - -
33. பிரோமத சம்வத்சரத ஹட்டு
34. வழி கோபால க 73991. 0
35. சுங்க பொம்மு (7) 921 உப
36. யம் கோபால க 7412 ரி 0 சந்த வு
37. டு வழி கிராமவன்று சர்வ மான்ய
38. வாகி நடசி கொண்டு பருவ ஆகே
39. கட்ல மாடிபி இதிது ஆப்பிரசார
40. கே கஞ்சி ஸ்தலதலி இடுவ பார்த்த
41. சாரதி ஸ்வாமி யவரு முந்நா
42. த ஈ அத்து தேவஸ்தான களிகே சதா
43. படிதரா தீபாராதனே நித்யோத்சவ
44. பக்சோத்சவ மாசோத்சவ சம்வத்ஸ
45. ரோத்ஸவ முந்தாத சாபே பக்யே
46. ஈ காமக்கா பாள்யத கிராமத ய
47. ல சதுர்சீமேகம் சங்க சக்ரந சிலா
48. பிரதிஷ்டையன்று மாடிசி கொட்டு ச
49. ந்தர சூர்யாதி வரைகு சாஸ்வத நிரு
50. பாதிகா சர்வமான்யவாகி கம்சி
51. [ஊரி] கே மணவாள பராக்கு ஸர
படி எடுக்கும் முன்
52. மாறு [பீச்சி]ய் யரவரா மடத
53. அவறிலிகே நடசிக்கொண்டு ப
54.ரோது
நன்றி : சுகவனமுருகன், மைசூர் பேராசிரியர் சாமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரஞ்சரம் லகுலீசர் - varanjaram lakuleesar

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் வரஞ்சரம் லகுலீசர்                                                           வரஞ்சரம் சிவன் கோயில் 10 நிமிடங்களில் கிடைத்த 10 நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு எதிர்பாராமல் ஒன்று கிடைக்கும்போது அடையும் மகிழ்சிக்கு அளவே இல்லை.சில நாட்களுக்கு முன் குருநாதர் விழுப்புரம் வீரராகவன் ஐயாவும் நானும் தேடலுக்கு போய் ஒரு கல்வெட்டை படி எடுத்தோம். அருகே உள்ள ஒரு கோயிலுக்கு போக வேண்டும் என்பது நீண்டநாள் திட்டம். ஆனால் எப்ப போனாலும் அந்தக்கோயில் மூடியே கிடக்கும். அன்றும் அப்படித்தான் மூடி இருந்தது. அர்சகர் வீட்டை விசாரித்து அவரை நேரில் சந்தித்தோம். அவர் வெளியூர் கிளம்புகிறேன் இன்னொரு நாள் காலையில் சீக்கிரம் வாங்க என்று சொன்னார். ஐயா ரொம்ப தொலைவில் இருந்து வருகிறோம், ஒரு 10 நிமிடம் திறந்து விட்டால் பார்த்து விடுகிறோம் என அனுமதி வாங்கி உள்ளே சென்றோம். மளமளவென செல்லில் படங்களை சுட்டு தள்ளினேன். அர்ச்சகருக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினோம்.வீட்டுக்கு வந்த பின் தான் ஒவ்வொரு படமாக பார்த்தேன். ஒரு படத்தை பார்த்தபோது உடலுக்குள் திடீரென ஒரு உற்சாகம் தொற்றியது. இவர் அவராக

சேலம் வரலாற்று ஆய்வு மையம்-பேளூர் மூக்கறுப்பு கல்வெட்டு

மூக்கறுப்பு போர் நடந்ததிற்கான முதல் கல்வெட்டு ஆதாரம் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி. 2015 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூருக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு கல்வெட்டுக்கள் ஏதாவது கிடைக்குமா என தேடியபோது அங்காளம்மன் கோயில் முன்புள்ள பாக்குத்தோப்பில் ஓர் கல்வெட்டு இருப்பதாய் சொன்னார்கள். போய் பார்த்த போது அக்கல்வெட்டு பாதி பூமியில் புதைந்திருந்தது. அதை புகைப்படம் மட்டும் எடுத்து விட்டு வந்து விட்டேன். அதன் பின் சேலம் வரலாற்று தேடல் குழு என்ற அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது         சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,   கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் அய்யா துணைத்தலைவர்   கலைச்செல்வன் ஆசிரியர், செயலாளர் மருத்துவர் பொன்னம்பலம், இணைச்செயலாளர் பெரியார்மன்னன், பொருளாளர் சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் அடங்கிய குழு இக்கல்வெட்டை ஆய்வு செய்து மூக்கறுப்பு போர் நடந்ததற்கான  ஆதாரத்தை கண்டு பிடித்தது .இதைப்பற்றி சன்னல் இதழ் வெளியிட்ட கட்டுரை     கல்வெட்டின் மேல் சிவல

வீரகனூர் புத்தர்

  வீரகனூர் புத்தர் - மகதை மண்டலம் புத்தரின் கையில் காணப்படும் இந்த முக்கோணம் போன்ற குறியீடு நமக்கு சிறப்பான புதிய செய்தி ஏதாவது ஒன்றை சொல்கிறதா ??    சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரை தலைநகராக கொண்ட மகதை மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்த ஊர் வீரகனூர் அங்கு உள்ள புத்தர் சிலை இது இதன் காலம் 12 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்