முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேவியாக்குறிச்சி நடுகற்கள்- தினகரன் செய்தி



தேவியாக்குறிச்சி நடுகல்லுடன் நான்
தினகரன் செய்தி
ஆத்தூர் அரசினர் கலைக்கல்லூரி
மாணவ மாணவியர்
தேவியாக்குறிச்சி நடுகற்கள்- தினகரன் செய்தி
ஆத்தூர்: தலைவாசல் அருகே, 12ம் நூற்றாண்டை சேர்ந்த 2 நடுகற்களை வரலாற்று மையத்தை சேர்ந்தவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி கிராமத்தில், சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், தெற்குமேடு என்ற பகுதியில், ராமசாமி என்பவரது தோட்டத்தின் அருகே ஏரிவாய்க்கால் கரையோரத்தின் ஒரே இடத்தில் 2  நடுகற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நடுகற்களில் இடதுபுறம் உள்ள நடுகல் 75 செ.மீ உயரமும், 55 செ.மீ அகலம் 12 செ.மீ தடுமனும் உள்ள ஒரு பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இடதுபுறம் சாய்ந்த கொண்டையானது அள்ளி முடிக்கப்பட்டு, முடிச்சு பறக்கும் நிலையில் உள்ளது. 

காதுகளில் காதணி, கழுத்தில் சரபளி சவடி போன்ற ஆபரணங்களும், மார்பில் சன்னவீரம் எனப்படும் வீரச்சங்கிலியும் காணப்படுகிறது. சன்னவீரம் என்பது போருக்கு போகும் வீரர்கள் அணிவதாகும். முதுகில் அம்புக்கூட்டில் 4 அம்புகள் உள்ளன. வீரனின் இடது கை நீண்ட வில்லினை பற்றியுள்ளது. வலது கையில் அம்பும்,  இடைக்கட்டு மூன்று வரிகளில் உள்ளது.  அரையாடையின் முடிச்சு நீண்டு வில் வரை உள்ளது. வீரனின் வலது பக்க இடுப்பில் குறுவாள் உள்ளது. பாதமானது பூமிக்கடியில் புதைந்துள்ளது. மிகவும் அலங்காரமான நிலையில் வீரக்கல் காட்டப்பட்டுள்ளது. இது இந்த பகுதியில் நடந்த போரின்போது இறந்த வீரனுக்கு வைக்கப்பட்ட நடுகல்லாகும். 12ம் நூற்றாண்டில் வாணகோவரையர் என்பவர்கள் ஆறகளூரை தலை நகராக கொண்டு மகதை நாட்டை ஆண்டனர்.  தேவியாக்குறிச்சி என்ற இந்த ஊர் தேவியர் குறிச்சி என்ற பெயரில் ஆறுகளூரின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. 

ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோயிலில் பணிபுரிந்த தேவரடியார்களுக்கு தேவியாகுறிச்சியில் நிலம் தானமாக தரப்பட்டுள்ளது. வாணகோவரையர் ஆட்சியின் போது ஹொய்சாளர்கள், பாண்டியர்கள் விஜயநகர பேரரசர்கள் போன்றோருடன் போரில் ஈடுபட்டு இறந்த ஒரு வீரன் நினைவாக வைக்கப்பட்டுள்ள வீரக்கல் இதுவாகும். இது 12ம் நூற்றாண்டை சேர்ந்தது என கருதலாம். அதிக அலங்காரம் இல்லாமல் எளிமையாக வீரக்கல் காட்டப்பட்டுள்ளது. மகத நாட்டை ஆண்ட வாணகோவரையர்கள் சார்பாக போரிட்டு வீர மரணமடைந்த வீரன் நினைவாக வைக்கப்பட்டுள்ள வீரக்கல்லாகும். இப்பகுதியில் இன்னும் ஆய்வுகள் மேற்கொண்டால் பல வரலாற்று நினைவு சான்றுகள் கிடைக்கலாம் என வரலாற்று ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=455582

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரஞ்சரம் லகுலீசர் - varanjaram lakuleesar

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் வரஞ்சரம் லகுலீசர்                                                           வரஞ்சரம் சிவன் கோயில் 10 நிமிடங்களில் கிடைத்த 10 நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு எதிர்பாராமல் ஒன்று கிடைக்கும்போது அடையும் மகிழ்சிக்கு அளவே இல்லை.சில நாட்களுக்கு முன் குருநாதர் விழுப்புரம் வீரராகவன் ஐயாவும் நானும் தேடலுக்கு போய் ஒரு கல்வெட்டை படி எடுத்தோம். அருகே உள்ள ஒரு கோயிலுக்கு போக வேண்டும் என்பது நீண்டநாள் திட்டம். ஆனால் எப்ப போனாலும் அந்தக்கோயில் மூடியே கிடக்கும். அன்றும் அப்படித்தான் மூடி இருந்தது. அர்சகர் வீட்டை விசாரித்து அவரை நேரில் சந்தித்தோம். அவர் வெளியூர் கிளம்புகிறேன் இன்னொரு நாள் காலையில் சீக்கிரம் வாங்க என்று சொன்னார். ஐயா ரொம்ப தொலைவில் இருந்து வருகிறோம், ஒரு 10 நிமிடம் திறந்து விட்டால் பார்த்து விடுகிறோம் என அனுமதி வாங்கி உள்ளே சென்றோம். மளமளவென செல்லில் படங்களை சுட்டு தள்ளினேன். அர்ச்சகருக்கு நன்றி சொல்லி விட...

ஆத்தூர் அய்யனார் சிற்பம்

வசிஷ்ட நதியில், கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூர், முல்லைவாடியை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று, மாரியம்மன் கோவிலில், மழை வேண்டி சிறப்பு பூஜை செய்து, அன்னதானம் வழங்கினர். அப்போது சாந்தி, 35, என்பவருக்கு அருள் வந்தது. அவர், 'கெட்டிமுதலி கோட்டை அருகே உள்ள வசிஷ்ட நதியில், புதைந்து கிடக்கும் சிலையை மீட்டால், மழை வரும்' என்றார். மதியம், 2:00 மணிக்கு, 30க்கும் மேற்பட்ட பெண்கள், பூஜை பொ ருட்கள், சேவல் கோழியுடன், சம்போடை வனம் அருகே, வசிஷ்ட நதிக்கு வந்தனர். பொக்லைன் மூலம், அங்கு பள்ளம் தோண்டியபோது, உருவம் இல்லாத உருளையான ஒன்றரை அடி உயரத்தில் கல் கிடைத்தது. அதற்கு பூஜை செய்து, கோழியை பலி கொடுத்தனர். இதையடுத்து, அங்கிருந்த மதுரகாளியம்மன் கோவில் பூசாரி ராஜாமணி, 60, 'ஆற்றின் கரை பகுதியொட்டி, ஆறு அடி ஆழத்தில் சிலை இருந்ததாக நினைவுள்ளது' என்றார். அந்த இடத்தை தோண்டியபோது, மூன்று அடி உயரம், இரண்டு அடி அகலத்தில், அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஆத்தூர் ஆர்.டி.ஓ., செல்வன் தலைமையிலான...

சேலம் மாவட்ட கோட்டைகள்

                                  சேலம் மாவட்ட கோட்டைகள்     சேலம் மாவட்ட கோட்டைகள் வரலாற்றில் சேலம் மாவட்டம் எப்போதுமே முக்கிய பங்கு வகித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் பல கோட்டைகள் இருந்திருந்தாலும் இன்றைய நிலையில் சில கோட்டைகளே பார்க்க கூடிய நிலையில் உள்ளன அவை... 1. ஆத்தூர் கோட்டை 2. சங்ககிரி கோட்டை 3. நாமக்கல் கோட்டை(பழைய சேலம் மாவட்டம்) கால வெள்ளத்தில் காணாமல் போன கோட்டைகள் 4. ஓமலூர் கோட்டை 5. சேலம் கோட்டை 6. நங்கவல்லி கோட்டை 7. சேந்தமங்கலம் கோட்டை 8. பரமத்தி கோட்டை 9. பேளூர் கோட்டை 10. பெத்தநாயக்கன் பாளையம் கோட்டை 11. ஆறகழூர் கோட்டை 12. மேச்சேரிக்கோட்டை 13. அமரகுந்தி கோட்டை 14. தம்மம்பட்டி கோட்டை... ஆத்தூர் கோட்டை நாமக்கல் கோட்டை சங்ககிரி கோட்டை இது தவிர சேலம் மாவட்டத்தில் உங்களுக்கு தெரிஞ்ச கோட்டை இருந்தா சொல்லுங்க நண்பர்களே...