முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேவியாக்குறிச்சி 2 நடுகற்கள்

தேவியாக்குறிச்சி நடுகற்கள்


தேவியாக்குறிச்சி நடுகல்லுடன்
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி





தேவியாக்குறிச்சி வீரகற்கள்
*கற்றலும் கற்பித்தலும் மனதுக்கு நிறைவு தரும் இனிய அனுபவங்கள். அந்த வகையில் ஆத்தூர் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியை சேர்ந்த மாணவர் செல்வகுமார் மற்றும் மாணவ மாணவியர் கல்வெட்டுகளை பற்றி அறிய ஆறகழூர் வந்திருந்தனர். அவர்களுக்கு ஆறகழூர் திருகாமீசுரமுடைய நாயனார் கோயில், கரிவரதராஜ பெருமாள் கோயில்,தியாகனூர் புத்தர்,மலைமண்டல பெருமாள் கோயில் கல்வெட்டுகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது*
*அப்போது செல்வகுமார் என்ற மாணவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் வீட்டுக்கு அருகே இருந்த இரண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அந்த செய்தி இன்றைய தினகரன்,டைம்ஸ் ஆப் இந்தியா,இண்டியன் எக்ஸ்பிரஸ் , சேலம் ஆன்லைன் இணைய இதழ், ஆகியவற்றில் வெளிவந்ததுள்ளது.செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கும், செய்தியாளர்கள் திரு தினகரன் சேகர்,இண்டியன் எக்ஸ்பிரஸ் திரு சபரி,டைம்ஸ் ஆப் இந்தியா திரு சாஜு,சேலம் ஆன்லைன் திரு ராஜசேகர் ஆகியோருக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது*
4/12/2018
தேவியாக்குறிச்சியில் இரு நடுகற்கள் கண்டுபிடிப்பு


87108-753c4859-0a21
Salem:
December 3
தினமணி செய்தி
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தேவியாக்குறிச்சியில் இரண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தினகரன் செய்தி
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,மருத்துவர் பொன்னம்பலம்,ஜீவநாராயணன், கவிஞர் மன்னன் ஆகியோர் ஆத்தூர் அரசினர் கலைக்கல்லூரியை சேர்ந்த மாணவர் செல்வகுமார்,மற்றும் மாணவ மாணவியர் கொடுத்த தகவலின் பேரில் தேவியாக்குறிச்சி பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி
அப்போது தெற்குமேடு என்ற இடத்தில் ராமசாமி என்பவர் நிலம் அருகே ஏரிவாய்கால் கரையில் இரு நடுகற்கள் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த இரு நடுகற்களும் அருகருகே காணப்படுகின்றன.
இடது பக்கம் உள்ள நடுகல்லானது 75 செ.மீ.உயரமும்,55 செ.மீ அகலமும், 12 செ.மீ தடிமனும் உள்ள ஒரு பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. இடது புறம் சாய்ந்த கொண்டையானது அள்ளி முடியப்பட்டுள்ளது.கொண்டையின் முடிச்சு அருகே பறக்கும் நிலையில் உள்ளது. காதுகளில் காதணி,கழுத்தில் சரபளி,சவடி,போன்ற ஆபரணங்களும், மார்பில் சன்னவீரம் எனப்படும் வீரச்சங்கிலியும் காணப்படுகிறது. சன்ன வீரம் என்பது போருக்கு செல்லும் வீரர்கள் அணிவதாகும். முதுகில் அம்புக்கூட்டில் நான்கு அம்புகள் உள்ளன. வீரனின் இடது கை நீண்ட வில்லினை பற்றியுள்ளது. வலது கையில் அம்பு உள்ளது. இடைக்கட்டு மூன்று வரிகளில் உள்ளது. அரையாடையின் முடிச்சு நீண்டு வில் வரை உள்ளது. வீரனின் வலது பக்க இடுப்பில் குறுவாள் உள்ளது. பாதமானது பூமிக்கடியில் புதைந்துள்ளது. மிகவும் அலங்காரமான நிலையில் வீரக்கல் காட்டப்பட்டுள்ளது.
ஆத்தூர் கல்லூரி மாணவ மாணவியருடன்
இது இந்தப்பகுதியில் நடந்த போரின்போது இறந்த வீரனுக்கு வைக்கப்பட்ட வீரக்கல்லாகும். 12 ஆம் நூற்றாண்டில் வாணகோவரையர் என்பவர்கள் ஆறகழூரை தலைநகராக கொண்டு மகதை நாட்டை ஆண்டு வந்தனர். தேவியாக்குறிச்சி என்ற இந்த ஊர் தேவியர் குறிச்சி என்ற பெயரில் ஆறகழூரின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.
ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோயிலில் பணிபுரிந்த தேவரடியார்களுக்கு தேவியர் குறிச்சியில் நிலம் தானமாக தரப்பட்டுள்ளது. வாணகோவரையர்கள் ஆட்சியின் போது ஹெய்சாளர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசு போன்றோருடன் போரில் ஈடுபட்டனர். அந்த போர்களில் ஈடுபட்டு இறந்த ஒரு வீரன் நினைவாக வைக்கப்பட்டுள்ள வீரக்கல் இதுவாகும். இதன் காலம் 14 ஆம் நூற்றாண்டு என கருதலாம். இந்த வீரனின் வலது புறம் மற்றொரு நடுகல் காணப்படுகிறது. இது 76 செ.மீ உயரமும், 58 செ.மீ அகலமும், 7 செ.மீ தடிமனும் உள்ள பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது.
தினகரன் செய்தி
இது 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம். அதிக அலங்காரம் இல்லாமல் எளிமையாக வீரக்கல் காட்டப்பட்டுள்ளது. நேரான கொண்டை, கழுத்தில் சவடி,சரபளி, காதுகளில் அணிகலன்கள் ,மார்பில் சன்னவீரத்துடன் காணப்படுகிறது. இடது கையில் நீண்ட வில்,வலது கையில் அம்பு,முதுகில் உள்ள அம்புக்கூட்டில் நான்கு அம்புடன் காட்டப்பட்டுள்ளது. அரையாடை, ஆடை முடிச்சு உள்ளது. இடுப்புக்கு கீழ் முழங்கால் வரை வலது கால் மேற்புறம் சிதைந்துள்ளது. இடது பாதமானது இடப்பக்கம் திரும்பி போருக்கு செல்லும் நிலையில் உள்ளது. மகதை நாட்டை ஆண்ட வாணகோவரையர்கள் சார்பாக போரிட்டு, போரில் வீர மரணம் அடைந்த வீரன் நினைவாக வைக்கப்பட்டுள்ள வீரக்கல் இதுவாகும்.
இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம் என சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.
http://www.nntweb.com/news-view.php?nid=484&nalias=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D....

https://timesofindia.indiatimes.com/city/salem/13th-century-tombstones-found-in-salem-district/articleshow/66928327.cms?fbclid=IwAR0_WwBrJGXqmQGUcSu05hlYYMQ1ZuY9NEpherZGEUV1xem9cOxq1I8tDOo

http://cfcm.salemonline.in/article/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2579647?fbclid=IwAR3VAaDqLNcYFtmvMwLhGTSA-hHFAZc65ukmsISmpYMle8A0R3xxRm8l6fk

https://www.vikatan.com/amp/news/spirituality/143794-invent-of-dead-soldiers-monument.html?fbclid=IwAR3KS6YM9hGTLFVKssBDByVOYkLo6tlMUgfepVxUSpx_J9p4EZMtBnHcnAA

http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/dec/05/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%872-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3052006.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரஞ்சரம் லகுலீசர் - varanjaram lakuleesar

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் வரஞ்சரம் லகுலீசர்                                                           வரஞ்சரம் சிவன் கோயில் 10 நிமிடங்களில் கிடைத்த 10 நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு எதிர்பாராமல் ஒன்று கிடைக்கும்போது அடையும் மகிழ்சிக்கு அளவே இல்லை.சில நாட்களுக்கு முன் குருநாதர் விழுப்புரம் வீரராகவன் ஐயாவும் நானும் தேடலுக்கு போய் ஒரு கல்வெட்டை படி எடுத்தோம். அருகே உள்ள ஒரு கோயிலுக்கு போக வேண்டும் என்பது நீண்டநாள் திட்டம். ஆனால் எப்ப போனாலும் அந்தக்கோயில் மூடியே கிடக்கும். அன்றும் அப்படித்தான் மூடி இருந்தது. அர்சகர் வீட்டை விசாரித்து அவரை நேரில் சந்தித்தோம். அவர் வெளியூர் கிளம்புகிறேன் இன்னொரு நாள் காலையில் சீக்கிரம் வாங்க என்று சொன்னார். ஐயா ரொம்ப தொலைவில் இருந்து வருகிறோம், ஒரு 10 நிமிடம் திறந்து விட்டால் பார்த்து விடுகிறோம் என அனுமதி வாங்கி உள்ளே சென்றோம். மளமளவென செல்லில் படங்களை சுட்டு தள்ளினேன். அர்ச்சகருக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினோம்.வீட்டுக்கு வந்த பின் தான் ஒவ்வொரு படமாக பார்த்தேன். ஒரு படத்தை பார்த்தபோது உடலுக்குள் திடீரென ஒரு உற்சாகம் தொற்றியது. இவர் அவராக

சேலம் வரலாற்று ஆய்வு மையம்-பேளூர் மூக்கறுப்பு கல்வெட்டு

மூக்கறுப்பு போர் நடந்ததிற்கான முதல் கல்வெட்டு ஆதாரம் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி. 2015 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூருக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு கல்வெட்டுக்கள் ஏதாவது கிடைக்குமா என தேடியபோது அங்காளம்மன் கோயில் முன்புள்ள பாக்குத்தோப்பில் ஓர் கல்வெட்டு இருப்பதாய் சொன்னார்கள். போய் பார்த்த போது அக்கல்வெட்டு பாதி பூமியில் புதைந்திருந்தது. அதை புகைப்படம் மட்டும் எடுத்து விட்டு வந்து விட்டேன். அதன் பின் சேலம் வரலாற்று தேடல் குழு என்ற அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது         சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,   கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் அய்யா துணைத்தலைவர்   கலைச்செல்வன் ஆசிரியர், செயலாளர் மருத்துவர் பொன்னம்பலம், இணைச்செயலாளர் பெரியார்மன்னன், பொருளாளர் சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் அடங்கிய குழு இக்கல்வெட்டை ஆய்வு செய்து மூக்கறுப்பு போர் நடந்ததற்கான  ஆதாரத்தை கண்டு பிடித்தது .இதைப்பற்றி சன்னல் இதழ் வெளியிட்ட கட்டுரை     கல்வெட்டின் மேல் சிவல

வீரகனூர் புத்தர்

  வீரகனூர் புத்தர் - மகதை மண்டலம் புத்தரின் கையில் காணப்படும் இந்த முக்கோணம் போன்ற குறியீடு நமக்கு சிறப்பான புதிய செய்தி ஏதாவது ஒன்றை சொல்கிறதா ??    சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரை தலைநகராக கொண்ட மகதை மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்த ஊர் வீரகனூர் அங்கு உள்ள புத்தர் சிலை இது இதன் காலம் 12 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்