முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புத்தூர் நடுகற்கள்


புத்தூர் நடுகற்கள்
காலைக்கதிர்



தலைவாசல் அருகே புத்தூர் கிராமத்தில் கண்டறியப்பட்ட 2 நடுகற்கள் பற்றிய செய்தி இன்றைய 3/01/2017 காலைக்கதிர், தினமணி,தினத்தந்தி,தினகரன் நாளிதழ்களில் வெளிவந்துள்ளது. செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கும் செய்தியாளர்கள் திரு காலைக்கதிர் தமிழ்செல்வன்,திரு தினமணி சரவணன்,திரு தினத்தந்தி வேலுமணி, திரு தினகரன் சேகர் ஆகியோருக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
தினத்தந்தி

தலைவாசல் அருகே 2 நடுகற்கள் கண்டுபிடிப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே புத்தூர் என்ற கிராமத்தில் 2 நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இண்டியன் எக்ஸ்பிரஸ்
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் புத்தூர் கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது புத்தூர் அரசுப்பள்ளி முன்புறம் உள்ள மரத்தடியில் இரண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டன .
தினகரன்
நடுகல்
ஆநிரை கவர்தல் அல்லது ஆநிரை மீட்டல், போரில் வீர மரணம் அடைந்தவர்கள், மக்களுக்கு தீங்கு செய்த புலி , பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றி போன்ற கொடிய மிருகங்களை வேட்டையாடும்போது இறந்தவர்கள், தன் நாடு போரில் வெற்றி பெற கொற்றவையின் முன் தன் உயிரை தானே பலி கொடுத்து கொண்டவர்கள், மக்கள் நலனுக்காக உயிரிழந்தவர்கள் இவர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது.
தினமணி
புத்தூரில் காணப்படும் நடுகற்கள் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்காக எடுக்கப்பட்டிருக்கலாம். இவை 40 செ.மீ உயரம் 35 செ.மீ அகலம் உடையதாக உள்ளது. இதில் ஒரு நடுகல் தலை இல்லாமல் உள்ளது. இதை தலைவெட்டி சாமி என ஊர் மக்கள் அழைக்கிறார்கள். முதல் நடுகல்லானது பின்னோக்கிய இடது பக்க கொண்டையுடனும் ,இடது கையில் வில் பற்றி வலது கையில் நாணில் அம்பை பூட்டி தொடுக்கும் நிலையில் உள்ளது. முதுகு பக்கம் அம்புக்கூடு ,இடையில் அரையாடை இடுப்பில் குறுவாளுடன் இடது பக்கம் எதிரியை தாக்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளது. இதன் காலம் 18 ஆம் நூற்றாண்டாகலாம்.
நடுகல் 18 ஆம் நூற்றாண்டு


இரண்டாவது நடுகல்லானது தலை சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளது . கழுத்தில் சரபளியும் சவடியும் காட்டப்பட்டுள்ளது .மார்பில் சன்னவீரம் வலது கையில் கத்தி , இடது கையில் வில் ஏந்தியும், வயிற்றுக்கட்டும் (உதிரபந்தம்) காட்டப்பட்டுள்ளது. வயிற்று கட்டின் சுங்கு முடிச்சு இடது பக்கம் காட்டப்பட்டுள்ளது. இடை முதல் தொடை வரை அரையாடையும் , வலதுகால் நேராகவும் இடது கால் இடப்பக்கம் திரும்பிய நிலையிலும் உள்ளது.
சன்னவீரம் போட்ட நடுகல்
சன்ன வீரம்
இந்த நடுகல்லில் காணப்படும் சன்னவீரம் முக்கியமான ஒன்றாகும் .சன்னவீரத்துடன் காணப்படும் நடுகற்கள் அரிதாகவே உள்ளது. சன்னவீரம் போர்கடவுளான முருகன்
ஆறகழூர் பொன்.வெங்கடேசன், விழுப்புரம் வீரராகவன்
அணிவதாகும். இது வீரத்தின் சின்னம் ,வீரச்சங்கிலியில் அமையும் ஓர் உறுப்பாகும். கழுத்தினை சுற்றியும் மார்பணிகளை சுற்றியும் ஒரு மூலையிலிருந்து எதிர்மூலைக்கு குறுக்கே சென்று முதுகிலும் அப்படியே அமைந்த இரு சங்கிலிகள் சன்ன வீரம்
இரண்டு நடுகற்கள்
எனப்படும். இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்று தரவுகள் கிடைக்கலாம். இவ்வாறு ஆய்வாளர்கள் கூறினார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரஞ்சரம் லகுலீசர் - varanjaram lakuleesar

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் வரஞ்சரம் லகுலீசர்                                                           வரஞ்சரம் சிவன் கோயில் 10 நிமிடங்களில் கிடைத்த 10 நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு எதிர்பாராமல் ஒன்று கிடைக்கும்போது அடையும் மகிழ்சிக்கு அளவே இல்லை.சில நாட்களுக்கு முன் குருநாதர் விழுப்புரம் வீரராகவன் ஐயாவும் நானும் தேடலுக்கு போய் ஒரு கல்வெட்டை படி எடுத்தோம். அருகே உள்ள ஒரு கோயிலுக்கு போக வேண்டும் என்பது நீண்டநாள் திட்டம். ஆனால் எப்ப போனாலும் அந்தக்கோயில் மூடியே கிடக்கும். அன்றும் அப்படித்தான் மூடி இருந்தது. அர்சகர் வீட்டை விசாரித்து அவரை நேரில் சந்தித்தோம். அவர் வெளியூர் கிளம்புகிறேன் இன்னொரு நாள் காலையில் சீக்கிரம் வாங்க என்று சொன்னார். ஐயா ரொம்ப தொலைவில் இருந்து வருகிறோம், ஒரு 10 நிமிடம் திறந்து விட்டால் பார்த்து விடுகிறோம் என அனுமதி வாங்கி உள்ளே சென்றோம். மளமளவென செல்லில் படங்களை சுட்டு தள்ளினேன். அர்ச்சகருக்கு நன்றி சொல்லி விட...

ஆத்தூர் அய்யனார் சிற்பம்

வசிஷ்ட நதியில், கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூர், முல்லைவாடியை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று, மாரியம்மன் கோவிலில், மழை வேண்டி சிறப்பு பூஜை செய்து, அன்னதானம் வழங்கினர். அப்போது சாந்தி, 35, என்பவருக்கு அருள் வந்தது. அவர், 'கெட்டிமுதலி கோட்டை அருகே உள்ள வசிஷ்ட நதியில், புதைந்து கிடக்கும் சிலையை மீட்டால், மழை வரும்' என்றார். மதியம், 2:00 மணிக்கு, 30க்கும் மேற்பட்ட பெண்கள், பூஜை பொ ருட்கள், சேவல் கோழியுடன், சம்போடை வனம் அருகே, வசிஷ்ட நதிக்கு வந்தனர். பொக்லைன் மூலம், அங்கு பள்ளம் தோண்டியபோது, உருவம் இல்லாத உருளையான ஒன்றரை அடி உயரத்தில் கல் கிடைத்தது. அதற்கு பூஜை செய்து, கோழியை பலி கொடுத்தனர். இதையடுத்து, அங்கிருந்த மதுரகாளியம்மன் கோவில் பூசாரி ராஜாமணி, 60, 'ஆற்றின் கரை பகுதியொட்டி, ஆறு அடி ஆழத்தில் சிலை இருந்ததாக நினைவுள்ளது' என்றார். அந்த இடத்தை தோண்டியபோது, மூன்று அடி உயரம், இரண்டு அடி அகலத்தில், அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஆத்தூர் ஆர்.டி.ஓ., செல்வன் தலைமையிலான...

சேலம் மாவட்ட கோட்டைகள்

                                  சேலம் மாவட்ட கோட்டைகள்     சேலம் மாவட்ட கோட்டைகள் வரலாற்றில் சேலம் மாவட்டம் எப்போதுமே முக்கிய பங்கு வகித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் பல கோட்டைகள் இருந்திருந்தாலும் இன்றைய நிலையில் சில கோட்டைகளே பார்க்க கூடிய நிலையில் உள்ளன அவை... 1. ஆத்தூர் கோட்டை 2. சங்ககிரி கோட்டை 3. நாமக்கல் கோட்டை(பழைய சேலம் மாவட்டம்) கால வெள்ளத்தில் காணாமல் போன கோட்டைகள் 4. ஓமலூர் கோட்டை 5. சேலம் கோட்டை 6. நங்கவல்லி கோட்டை 7. சேந்தமங்கலம் கோட்டை 8. பரமத்தி கோட்டை 9. பேளூர் கோட்டை 10. பெத்தநாயக்கன் பாளையம் கோட்டை 11. ஆறகழூர் கோட்டை 12. மேச்சேரிக்கோட்டை 13. அமரகுந்தி கோட்டை 14. தம்மம்பட்டி கோட்டை... ஆத்தூர் கோட்டை நாமக்கல் கோட்டை சங்ககிரி கோட்டை இது தவிர சேலம் மாவட்டத்தில் உங்களுக்கு தெரிஞ்ச கோட்டை இருந்தா சொல்லுங்க நண்பர்களே...