முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலிபுரம் கல்வெட்டுகளும் நவகண்ட சிற்பங்களும்

 

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் M.A(HIS),M.A(JMC),M.A(PU.AD), M.PHIL,D.pharm
தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்
செல் எண் : 9047514844, 7010580752


   

            விருது 



                 

        விழுப்புரம் வீரராகவன், ஆறகளூர் பொன்.வெங்கடேசன்
                       


உலிபுரத்தில் 489 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டும் நவகண்ட சிற்பங்களும் கண்டெடுப்பு

                     



   2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது மனைவிக்கு தேர்தல் பணி உலிபுரம் என்ற ஊரில் அளிக்கப்பட்டது.அதற்க்கு முன் உலிபுரம் என்ற ஊர் பெயரை கேள்விப்பட்டிருந்தாலும் அந்த ஊருக்கு போனதில்லை. தேர்தலுக்கு முதல் நாள் மனைவியை அழைத்துக்கொண்டு அந்த ஊருக்கு சென்றேன். மனைவி தேர்தல் பணியை கவனிக்க, நான் உள்ளூர் பிரமுகர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
                             
     உலிபுரம் துண்டுகல்வெட்டு


  
என் மனைவி ஒருவரிடம் நான் வரலாறு மற்றும் கல்வெட்டு ஆய்வுகள் செய்து கொண்டிருப்பதை பற்றி சொல்லி விட்டு உங்க ஊரில் ஏதாவது கல்வெட்டு இருக்கா என கேட்டார்.

எங்க ஊரில் ஒரு சிவன் கோயில் ஒரு காலத்தில் இருந்தது. ஆனா இப்ப இல்லை மேடம். ஆனா அங்க எழுத்து இருக்கிற மாதிரி ஒரு கல்லை பாத்த நினைவு இருக்கு.

                  

                    துண்டுகல்வெட்டு

  என் மனைவி என்னிடம் சொல்ல , இரவு 7 மணி ஆயிடுச்சே, சரி இருட்டாக இருந்தாலும் பரவாயில்லை என அவருடன் கிளம்பினேன். ஊருக்கு வெளியே 2 கி.மீ தொலைவில் ஸ்வேதா நதியின் தென்கரையில் இருந்த அந்த சிவன் கோயிலை சென்றடைந்தோம். கோயில் முற்றிலும் அழிந்து போய்விட்டது. மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மாதவன் என்பவர் முன்னெடுத்து புதிதாக கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளார்

               
     உலிபுரம் கல்வெட்டு

.
   
அப்போது கொரானா வந்ததால் இந்த செய்தியை வெளியிட முடியவில்லை. கிட்டத்தட்ட ஓராண்டு கடந்தது. ஒருநாள் உலிபுரம் மாதவன் அவர்களிடம் இருந்து ஒரு போன்.

  சார் நம்ம கோயிலுக்கு முன்னாடி இருந்த ஒரு வயலில் இருந்த புதரில் 2 சிலை இருக்கு என சொல்லி புகைப்படம் அனுப்பினார்.அதை பார்த்ததும் நவகண்டம் என புரிந்து கொண்டேன்
  
அடுத்த நாள் பைக் உலிபுரத்தை நோக்கி பறந்தது. நவகண்ட வீரர்களை படம் எடுத்து கொண்டேன்.

                        

நவகண்டம், ஆறகளூர் பொன்.வெங்கடேசன், மாதவன்

  பின் வந்த நாளிதழ், தொலைக்காட்சி செய்தி உங்களுக்காக
     

வணக்கம் நண்பர்களே. இந்த ஆண்டு 2021 . முதல் கண்டறிதல் இது.

*சேலம் வரலாற்று ஆய்வுமையம் கண்டறிந்த உலிபுரம் கல்வெட்டுகள், நவகண்டம் பற்றிய செய்தி இன்றைய காலைக்கதிர் நாளிதழ், தினமணி , தினமலர் இணைய தளம், ஜெயா பிளஸ் தொலைக்காட்சி, மாலை மலர் நாளிதழ், மாலை முரசு,நக்கீரன்,சன் செய்தி ஆகியவற்றில் வெளிவந்துள்ளது.செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கும் செய்தியாளர்கள் திரு தமிழ்செல்வன், திரு சரவணன், திரு ஆரோக்கியராஜ், திரு சிற்றரசு , திரு

கவிஞர்.பெ.பெரியார் மன்னன்

ஆகியோருக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது

                  

                      நவகண்டம்


   சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், ஆய்வுமையத்தலைவர் ஆறகளூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் மாதவன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் உலிபுரம் பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அங்குள்ள சுவேதா நதியின் தென்கரையில் 16 ஆம் நூற்றாண்டில் ஒரு சிவன் கோயில் இருந்து தற்போது அழிந்து விட்டது. அதை புதிதாக கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இக்கோயிலின் முன்பு இரு கல்வெட்டுகளும், முன்புறமுள்ள வயலில் இரு நவகண்ட சிற்பங்களும் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.


           



கல்வெட்டு


  இக்கோயிலில் இரு கல்வெட்டுகள் காணப்படுகின்றது.இதில் ஒன்று முழுமையான கல்வெட்டு, மற்றொன்று துண்டு கல்வெட்டு ஆகும். இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டு ஆகும்
.

துண்டு கல்வெட்டு


                   
     காலைக்கதிர் நாளிதழ்

இக்கோயிலின் முன்பு உடைந்த நிலையில் ஒரு துண்டு கல்வெட்டு காணப்படுகிறது. இதன் முன்புறம் சூரியன்,பிறை நிலா, சூலம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. சிதைந்த நிலையில் 3 வரிகள் உள்ளன. ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் என கல்வெட்டு துவங்குகிறது. இதன் மறுபுறத்தில் 13 வரிகளில் கல்வெட்டு உள்ளது. இங்கிருந்த கோயிலை அம்பலத்தாடி நாயனார் கோயில் என குறிக்கிறது.

                
                            தி டைம்ஸ் ஆப் இந்தியா


  16 ஆம் நூற்றாண்டில் ஆறகளூரை தலைநகராக கொண்ட மகதை மண்டலத்தின் ஒரு பகுதியாக உலிபுரம் இருந்துள்ளது. அப்போது மகதை மண்டலத்தின் பாளையக்காரராக துலுக்கண்ண நாயக்கர் என்பவர் இருந்துள்ளார். இவரின் கீழ் உலிபுரம் பகுதியை ஆண்ட தளவாய் திருமலையார் என்பவர் இங்குள்ள இறைவன் அம்பலத்தாடி நாயனாருக்கு மடம் ஒன்றை அமைக்க அரை மனையையும், இந்த மடத்தை நிர்வகிக்க ஆகும் செலவுக்காக தும்மலப்பட்டி என்ற ஊரில் நன்செய் நிலத்தையும் தானமாக கொடுத்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

                               

                            தினமணி

இரண்டாவது கல்வெட்டு

  கோயிலின் முன்புறம் நடப்பட்டுள்ள ஒரு பலகைக்கல்லில் இரு புறமும் 44 வரிகளில் இக்கல்வெட்டு காணப்படுகிறது. இக்கல்வெட்டு கி.பி.1531 ஆம் ஆண்டு அச்சுததேவ மகராயர் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது. உலிபுரம் என்றழைக்கப்படும் ஊர் அப்போது புலியுரம்பூர் எனவும், இறைவன் திருஅம்பலமுடைய தம்பிரான் என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். அச்சுததேவ மகராயர் காலத்தில் மகதை மண்டலத்து ஆத்தூர் கூற்றத்தில் புலியுரம்பூர் அமைந்திருந்தது. இப்பகுதிக்கு மாதைய நாயக்கர் என்பவர் அப்போது பாளையக்காரராக இருந்துள்ளார். அவர் திரு அம்பலமுடைய தம்பிரான் கோயில் பூசைக்கும், திருப்பணிக்கும் அனந்தாழ்வார் பிள்ளை என்பவருக்கு தன்மமாக செக்கடிக்கோம்பை, தும்பலப்பட்டி என்ற இரு கிராமங்களை தானமாக தந்துள்ளார். இக்கிராமங்களின் நான்கு எல்லைகளுக்கு உட்பட்ட நஞ்சை, புஞ்சை நிலங்களின் எல்லைகளை அளவிட்டு அங்கு சூலக்கல் எனப்படும் எல்லை கற்கள் நடப்பட்டன. அந்த நிலங்களில் வரும் வருவாய் இறைவனின் பூசைக்கும்,திருப்பணிக்கும் செலவிடப்படவேண்டும். இந்த தானத்தை போற்றி அழியாமல் காப்பவர்கள் கங்கை கரையிலே காரம் பசுவை தானமாக கொடுத்த புண்ணியத்தை பெறுவார்கள். இந்த தானத்தை அழிப்பவர்கள் கங்கை கரையிலே தன் தாய், தந்தை, குருவை, கொன்ற பாவத்தை அடைவார்கள் என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தானம் செய்யப்பட்ட இரு ஊர்களும் இன்றும் அதே பெயரில் வழங்கி வருகிறது.

          

                          மாலைமலர்

நவகண்டம்

  நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வழக்கம் பல்லவர்கள் காலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே போர் நடக்கும் போது தன் நாடு வெற்றி பெற கொற்றவையின் துணை வேண்டி அத்தெய்வத்துக்கு ஒரு வீரன் தன்னயே சுயபலி கொடுத்துக்கொள்வது வழக்கமாகும். போர் நடக்கும் முன் கொற்றவை கோயிலுக்கு வீரர்கள் சென்று பூசை செய்வர். அப்போது நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வீரர் தன் உடலில் உள்ள ஒன்பது இடங்களில் இருந்து சதையை அறிந்து கொற்றவையின் முன் வைப்பர், ஒன்பதாவதாக தன் தலையை தானே அரிந்து சுயபலி கொடுத்துக்கொள்வர். இப்படி பலி கொடுத்துக்கொள்ளும் வீரர்களுக்கு வைக்கப்படும் நடுகல்லே நவகண்டம் எனப்படும்.இந்த வீரர்களுக்கு உதிரப்பட்டியாக வீடும், நிலமும் வழங்கும் வழக்கமும் இருந்துள்ளது.

                         

                 மாலைமுரசு

உலிபுரம் நவகண்ட நடுகல்

  உலிபுரம் அம்பலத்தாடி நாயனார் சிவன் கோயில் இருந்த இடத்திற்கு முன்புறம் உள்ள வயலில் ஒரு புதருக்குள் இரு நவகண்ட நடுகல் சிற்பங்கள் கண்டறியப்பட்டன. இரண்டும் ஒரே மாதிரியான சிற்ப அமைதியை கொண்டுள்ளன. இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டாக கருதலாம். ஒரே போரில் வெற்றிபெற நவகண்டம் கொடுத்துக்கொண்ட வீரர்களாக இவர்கள் இருக்கலாம். பல்லவர்கள் ,சோழர்கள் காலத்தில் நடுகல்லில் அந்த வீரனின் பெயர்,ஊர்,எதற்காக இறந்தான் போன்ற விவரங்கள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டு இருக்கும். ஆனால் 12 ஆம் நூற்றாண்டுக்குப்பின் நடுகல்லில் கல்வெட்டை வெட்டி வைக்கும் வழக்கம் மறைந்து விட்டது. இந்த இரு நவகண்ட நடுகல்லிலும் எழுத்துக்கள் ஏதும் காணப்படவில்லை.

                  
                 நவகண்டம் நடுகல் 1


   3 அடி உயரம், நேரான கொண்டை,கொண்டை முடிச்சுடன் உள்ளது. முகமானது சற்று தேய்ந்து சிதைந்துள்ளது. காதணிகள், கழுத்தில் சவடி,சரபளி போன்ற அணிகலன்கள் காணப்படுகிறது. வலது கையில் ஒரு நீண்ட வாளானது கழுத்துக்கு நேராக காட்டப்பட்டுள்ளது. ஒரு நடுகல் நவகண்டம் என உறுதி செய்ய இப்படி கழுத்துக்கு நேரே கத்தி காட்டப்படும்.இடது கையில் ஒரு நீண்ட வாள் பூமியை தொட்ட நிலையிலும் உள்ளது. தோள்களில் தோள் வளையம், மணிக்கட்டில் கை வளையம், கால்களில் வீரக்கழலும் காணப்படுகிறது. அரையாடை ஆடை முடிச்சுடன் உள்ளது. வலது காலானது சற்று மடித்தும், பாதம் வலதுபக்கம் திரும்பிய நிலையிலும் உள்ளது. இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று தடயங்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

                  

                    நவகண்டம் நடுகல் 2

இணைய இணைப்புகள்

பாரத் சேனல்

https://react.etvbharat.com/tamil/tamil-nadu/state/salem/the-salem-historical-research-center-is-conducting-research-on-the-inscriptions-and-navakanda-sculptures/tamil-nadu20210110110935930

டைம்ஸ் ஆப் இந்தியா

https://timesofindia.indiatimes.com/city/chennai/two-16th-century-hero-stones-found-at-tamil-nadus-ulipuram/articleshow/80126521.cms?fbclid=IwAR2Bk2gHcpZ4oTn_Nl6jJV33POzemSvt2zk7CzierYO3DLanDicXcWYbah4

தினமணி

https://www.dinamani.com/latest-news/sirappu-seithigal/2021/jan/02/discovery-of-2-inscriptions-and-2-navakanda-sculptures-dating-back-to-489-years-at-ulipuram-3536131.html?fbclid=IwAR1xMeb1YQKpRtSpfe49n9jd9p8VXRupIgs_n04p28psO_VyMePP_fQlxZU

தினமலர்

https://www.dinamalar.com/news_detail.asp?id=2682147&fbclid=IwAR1bn1Le3mEHuutWjOGXCM3B-7roelr_wzig-UmsoXBREsTwz4uz8_6Qy1Y

நக்கீரன்

https://nakkheeran.in/special-articles/special-article/discovery-489-year-old-inscriptions-and-navakanda-sculptures?fbclid=IwAR1YiCoSCUJ-SPsvjhgusVB4tqHig649tKauApZ6l_EwaHHypgzjWtmEOPo

ஜெயா பிளஸ் தொலைகாட்சி

https://www.youtube.com/watch?reload=9&reload=9&v=JitpqNfb-eo&feature=share&fbclid=IwAR2SGT9jSaRtmxGPFDlSFYSlbVLbjhXF4-a6su8lTW7o3fTZ3sK_VKWfLFE

news next இணையதளம்

https://tamil.newsnext.live/the-salem-historical-research-center-is-conducting-research-on-the-inscriptions-and-navakanda-sculptures/




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரஞ்சரம் லகுலீசர் - varanjaram lakuleesar

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் வரஞ்சரம் லகுலீசர்                                                           வரஞ்சரம் சிவன் கோயில் 10 நிமிடங்களில் கிடைத்த 10 நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு எதிர்பாராமல் ஒன்று கிடைக்கும்போது அடையும் மகிழ்சிக்கு அளவே இல்லை.சில நாட்களுக்கு முன் குருநாதர் விழுப்புரம் வீரராகவன் ஐயாவும் நானும் தேடலுக்கு போய் ஒரு கல்வெட்டை படி எடுத்தோம். அருகே உள்ள ஒரு கோயிலுக்கு போக வேண்டும் என்பது நீண்டநாள் திட்டம். ஆனால் எப்ப போனாலும் அந்தக்கோயில் மூடியே கிடக்கும். அன்றும் அப்படித்தான் மூடி இருந்தது. அர்சகர் வீட்டை விசாரித்து அவரை நேரில் சந்தித்தோம். அவர் வெளியூர் கிளம்புகிறேன் இன்னொரு நாள் காலையில் சீக்கிரம் வாங்க என்று சொன்னார். ஐயா ரொம்ப தொலைவில் இருந்து வருகிறோம், ஒரு 10 நிமிடம் திறந்து விட்டால் பார்த்து விடுகிறோம் என அனுமதி வாங்கி உள்ளே சென்றோம். மளமளவென செல்லில் படங்களை சுட்டு தள்ளினேன். அர்ச்சகருக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினோம்.வீட்டுக்கு வந்த பின் தான் ஒவ்வொரு படமாக பார்த்தேன். ஒரு படத்தை பார்த்தபோது உடலுக்குள் திடீரென ஒரு உற்சாகம் தொற்றியது. இவர் அவராக

சேலம் வரலாற்று ஆய்வு மையம்-பேளூர் மூக்கறுப்பு கல்வெட்டு

மூக்கறுப்பு போர் நடந்ததிற்கான முதல் கல்வெட்டு ஆதாரம் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி. 2015 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூருக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு கல்வெட்டுக்கள் ஏதாவது கிடைக்குமா என தேடியபோது அங்காளம்மன் கோயில் முன்புள்ள பாக்குத்தோப்பில் ஓர் கல்வெட்டு இருப்பதாய் சொன்னார்கள். போய் பார்த்த போது அக்கல்வெட்டு பாதி பூமியில் புதைந்திருந்தது. அதை புகைப்படம் மட்டும் எடுத்து விட்டு வந்து விட்டேன். அதன் பின் சேலம் வரலாற்று தேடல் குழு என்ற அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது         சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,   கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் அய்யா துணைத்தலைவர்   கலைச்செல்வன் ஆசிரியர், செயலாளர் மருத்துவர் பொன்னம்பலம், இணைச்செயலாளர் பெரியார்மன்னன், பொருளாளர் சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் அடங்கிய குழு இக்கல்வெட்டை ஆய்வு செய்து மூக்கறுப்பு போர் நடந்ததற்கான  ஆதாரத்தை கண்டு பிடித்தது .இதைப்பற்றி சன்னல் இதழ் வெளியிட்ட கட்டுரை     கல்வெட்டின் மேல் சிவல

வீரகனூர் புத்தர்

  வீரகனூர் புத்தர் - மகதை மண்டலம் புத்தரின் கையில் காணப்படும் இந்த முக்கோணம் போன்ற குறியீடு நமக்கு சிறப்பான புதிய செய்தி ஏதாவது ஒன்றை சொல்கிறதா ??    சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரை தலைநகராக கொண்ட மகதை மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்த ஊர் வீரகனூர் அங்கு உள்ள புத்தர் சிலை இது இதன் காலம் 12 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்