முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சேலம் வரலாற்று கருத்தரங்கம்

அன்புடையீர்
வணக்கம்.

சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் (Salem Historical Research Center/SHRC) இரண்டாமாண்டு வரலாற்று கருத்தரங்கம் எதிர்வரும் மே மாதம் 13ம் தேதி (13.5.18) ஞாயிற்றுக்கிழமை அன்று சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள கருத்தரங்க கூடத்தில் (A/C) நடைபெற உள்ளது.

இந்த வரலாற்றுக் கருத்தரங்கில்
அறிஞர் பெருமக்கள்
1.முனைவர் பேராசிரியர் திரு. ராசவேலு ஐயா அவர்கள், ( துறைத்தலைவர், கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்)

2.மூத்த கல்வெட்டாய்வாளர் விழுப்புரம் திரு.வீரராகவன் ஐயா அவர்கள்

3.சமண/பவுத்தவியல் ஆய்வாளர் முனைவர்.மகாத்மா செல்வபாண்டியன் அவர்கள் ( Mahathma Selvapandiyan)

4.வரலாறு.காம் ஆசிரியர் குழுவினர்
திரு. ச.கமலக்கண்ணன் அவர்கள் மற்றும்
5. திரு.சு.சீதாராமன் அவர்கள்
( Seetharaman Subramanian)
ஆகியோர் செறிவான தலைப்புகளில் வரலாற்றுரையாற்ற உள்ளனர்.
( தலைப்புகளை அழைப்பிதழில் காண்க)

அன்றைய தினம் எமது ஆய்வு மையம் இதுவரை கண்டறிந்த நடுகற்கள் அனைத்தையும் தொகுத்து
"சேலம் மாவட்ட நடுகற்கள்
(புதிய கண்டறிதல்கள்)" என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

மூத்த கல்வெட்டாய்வாளரும் எமது ஆய்வு மையத்தின் ஆலோசகருமான விழுப்புரம் திரு.வீரராகவன் ஐயாவின் "ஏமப்பேர் வேதபுரீசுவரர் திருக்கோயில்" என்ற புத்தக வெளியீடும் அன்றைய தினம் நடைபெற உள்ளது.

முத்தாய்ப்பாக தொல்லியல் அறிஞர்கள் 1.விழுப்புரம் திரு.வீரராகவன் ஐயா,
2.திரு. குழந்தை வேலவன் ஐயா,
3.வெள்ளக்கல்பட்டி திரு. துரைசாமிஐயா,
4.திரு.சுகவன.முருகன் ஐயா ( Manonmani Pudhuezuthu) ஆகிய நால்வருக்கும்
சேலம் வரலாற்று ஆய்வு மையம்
"வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கி சிறப்பிக்க உள்ளது.

மேலும் திருமதி.மங்கை வீரராகவன்( Mangai Ragavan) அவர்களது தொல்லியல் கண்காட்சியும்
பேளூர் புலவர் திரு.வீரமணி வீராசாமி ஐயா( Veeramani Veeraswami) அவர்களின் நாணயங்கள் மற்றும் தபால் தலைகள் கண்காட்சியும் இடம் பெறுகின்றன.

இம்முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள வரலாற்று ஆர்வலர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

கருத்தரங்க கூடம் இடவசதி, மதிய உணவு ஏற்பாடு , பதிவு செய்வோருக்கு விழாவில் வெளியிடப்படும் "சேலம் மாவட்ட நடுகற்கள் "புத்தகம் வழங்குதல் போன்ற முன்னேற்பாடுகள் செய்யும் பொருட்டு வருகை புரிவோரின் முன்பதிவு மிக இன்றியமையானதாகிறது.
எனவே அழைப்பிதழில் கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி எண்ணிற்கு அழைத்து தங்களது வருகையை முன்கூட்டியே பதிவு செய்து உறுதிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!
.......................................................................
#மே_13
அனைவரும் வருக..
வரலாற்றமிர்தம் பருக.!

அழைத்து மகிழும்..

ஆறகழூர் பொன்.வெங்கடேசன்
தலைவர்/சேலம் வரலாற்று ஆய்வுமையம்
மற்றும்




நிர்வாகிகள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரஞ்சரம் லகுலீசர் - varanjaram lakuleesar

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் வரஞ்சரம் லகுலீசர்                                                           வரஞ்சரம் சிவன் கோயில் 10 நிமிடங்களில் கிடைத்த 10 நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு எதிர்பாராமல் ஒன்று கிடைக்கும்போது அடையும் மகிழ்சிக்கு அளவே இல்லை.சில நாட்களுக்கு முன் குருநாதர் விழுப்புரம் வீரராகவன் ஐயாவும் நானும் தேடலுக்கு போய் ஒரு கல்வெட்டை படி எடுத்தோம். அருகே உள்ள ஒரு கோயிலுக்கு போக வேண்டும் என்பது நீண்டநாள் திட்டம். ஆனால் எப்ப போனாலும் அந்தக்கோயில் மூடியே கிடக்கும். அன்றும் அப்படித்தான் மூடி இருந்தது. அர்சகர் வீட்டை விசாரித்து அவரை நேரில் சந்தித்தோம். அவர் வெளியூர் கிளம்புகிறேன் இன்னொரு நாள் காலையில் சீக்கிரம் வாங்க என்று சொன்னார். ஐயா ரொம்ப தொலைவில் இருந்து வருகிறோம், ஒரு 10 நிமிடம் திறந்து விட்டால் பார்த்து விடுகிறோம் என அனுமதி வாங்கி உள்ளே சென்றோம். மளமளவென செல்லில் படங்களை சுட்டு தள்ளினேன். அர்ச்சகருக்கு நன்றி சொல்லி விட...

ஆத்தூர் அய்யனார் சிற்பம்

வசிஷ்ட நதியில், கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூர், முல்லைவாடியை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று, மாரியம்மன் கோவிலில், மழை வேண்டி சிறப்பு பூஜை செய்து, அன்னதானம் வழங்கினர். அப்போது சாந்தி, 35, என்பவருக்கு அருள் வந்தது. அவர், 'கெட்டிமுதலி கோட்டை அருகே உள்ள வசிஷ்ட நதியில், புதைந்து கிடக்கும் சிலையை மீட்டால், மழை வரும்' என்றார். மதியம், 2:00 மணிக்கு, 30க்கும் மேற்பட்ட பெண்கள், பூஜை பொ ருட்கள், சேவல் கோழியுடன், சம்போடை வனம் அருகே, வசிஷ்ட நதிக்கு வந்தனர். பொக்லைன் மூலம், அங்கு பள்ளம் தோண்டியபோது, உருவம் இல்லாத உருளையான ஒன்றரை அடி உயரத்தில் கல் கிடைத்தது. அதற்கு பூஜை செய்து, கோழியை பலி கொடுத்தனர். இதையடுத்து, அங்கிருந்த மதுரகாளியம்மன் கோவில் பூசாரி ராஜாமணி, 60, 'ஆற்றின் கரை பகுதியொட்டி, ஆறு அடி ஆழத்தில் சிலை இருந்ததாக நினைவுள்ளது' என்றார். அந்த இடத்தை தோண்டியபோது, மூன்று அடி உயரம், இரண்டு அடி அகலத்தில், அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஆத்தூர் ஆர்.டி.ஓ., செல்வன் தலைமையிலான...

சேலம் வரலாற்று ஆய்வு மையம்-பேளூர் மூக்கறுப்பு கல்வெட்டு

மூக்கறுப்பு போர் நடந்ததிற்கான முதல் கல்வெட்டு ஆதாரம் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி. 2015 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூருக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு கல்வெட்டுக்கள் ஏதாவது கிடைக்குமா என தேடியபோது அங்காளம்மன் கோயில் முன்புள்ள பாக்குத்தோப்பில் ஓர் கல்வெட்டு இருப்பதாய் சொன்னார்கள். போய் பார்த்த போது அக்கல்வெட்டு பாதி பூமியில் புதைந்திருந்தது. அதை புகைப்படம் மட்டும் எடுத்து விட்டு வந்து விட்டேன். அதன் பின் சேலம் வரலாற்று தேடல் குழு என்ற அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது         சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,   கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் அய்யா துணைத்தலைவர்   கலைச்செல்வன் ஆசிரியர், செயலாளர் மருத்துவர் பொன்னம்பலம், இணைச்செயலாளர் பெரியார்மன்னன், பொருளாளர் சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் அடங்கிய குழு இக்கல்வெட்டை ஆய்வு செய்து மூக்கறுப்பு போர் நடந்ததற்கான  ஆதாரத்தை கண்டு பிடித்தது .இதைப்பற்றி சன்னல் இதழ் வெளியிட்ட கட்டுரை ...